Posts

எல்லைக் கட்டுப்பாட்டு அனுமதி (Inner Line Permit - ILP)

Image
எல்லைக் கட்டுப்பாட்டு அனுமதி (Inner Line Permit - ILP) ஒரு இந்திய குடிமகன் இந்தியாவின் ஒரு குறிப்பிட்டப் பாதுகாக்கப்பட்ட அல்லது வரையறுக்கப்பட்டப் பகுதிக்குள் நுழைய/செல்ல, ஒரு குறிப்பட்ட கால அளவிற்கு வழங்கப்ப்படும் அனுமதி சீட்டு ஆகும். இந்தச் சீட்டு வெறும் நுழைவு/பயண அனுமதி மட்டுமே; தங்குவதற்கல்ல. சாதாரணமாக, 15 நாட்களுக்கு மிகாமல் வழங்கப்படும். இதைத் தவிர, வெளி மாநிலத்தவர் இப்பகுதிகளில் அசையாச் சொத்துகளை வாங்க முடியாது; கலப்புத் திருமணம் செய்ய முடியாது போன்ற நிபந்தனைகளும் உண்டு. இதன் மூலம் மண்ணின் நிலம், வேலைவாய்ப்பு பாதுகாக்கப்படும். வேறு மாநிலத்தவர்கள் நிரந்தரமாக தங்க முடியாது. எனவே மண்ணின் மக்கள் கையிலே கல்வி, வணிகம், தொழில் இருக்கும். Inner Line Permit கொண்டு வந்தால், (Citizenship Amendment Bill - CAB) குடியுரிமை திருத்த சட்டத்தால் எந்த பாதிப்பும் ஏற்படாது. இந்தியாவில் வடகிழக்கில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் CABயிலிருந்து விலக்கு அளிக்கப் பட்டுள்ளது. இந்த உட்கோட்டு நுழைவு அனுமதி முறையில் மணிப்பூரின் சேர்க்கையும் 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 10ம் தேதியன்று அறிவிக்கப் பட்டது. இந...

நார்வே நாளிதழில் மகள் ஈவா

Image
ஈவாவை பற்றி இதுவரை மூன்று முறை நாளிதழில் செய்தி வந்திருக்கிறது அவை அனைத்தும் அவள் வாங்கிய பரிசை பற்றிய இருவரி செய்திகள், ஆனால் இந்த முறை அவளின் படைப்பை மட்டும் பேசாமல் அவளை பற்றியும் ஒரு பத்திரிக்கையாளர் அவளிடம் பேட்டி கண்டு கட்டுரையாக எழுதியுள்ளார். பெற்றோர்களாக எங்களுக்கு இதில் பெரும் மகிழ்ச்சி குழந்தையிலிருந்து அவள் படங்களை இந்த முகப்புத்தகத்தில் உங்களோடு பகிர்ந்து வருகிறேன் நீங்களும் இந்த செய்தியை மகிழ்வோடு அணுகுவீர்கள் என்ற நம்பிக்கையில் பகிர்கிறேன். ''கிளாரா டூரிட் ஃபிட்ஜே'' பத்திரிக்கையாளரின் நார்வேஜியன் கட்டுரை, வெளியிடப்பட்டது: 20.12.2019. என்னால் இயன்ற தமிழாக்கத்தில் இதோ ----------------------------------------------- ''திறமையின் குரல் திறந்துவைத்தது திருவிழாத்தெருவை'' வெள்ளை மழை பொழியாத கிறிஸ்துமஸ் மாதமா வானமே நீ வெள்ளை மழை பொழி வெள்ளை மழை பொழி வெள்ளை மழை பொழி என்று தேவதை ஒருத்தி மேடையில் தனியாக நின்று பாடுகிறார், அவளின் அந்த சக்தி வாய்ந்த குரல் விழா தெருவின் வாசலை திறந்து வைத்தது. நகரும் கால்களை நிற்க வைத்தது "லெட் இட் ஸ்னோ...

#நீங்கள்_ஒட்டுக்_கேட்கப்படுகிறீர்கள்

Image
நீங்கள் ஒட்டுக் கேட்கப்படுகிறீர்கள் ஆம் நம்பவில்லையா இதோ நான் கூறும் வழிமுறையில் அதனை சோதித்துப் பாருங்கள்.. #ஆய்வுமுறை1 நீங்களும் உங்கள் நண்பரும் ஒரு ''டிஜிட்டல் கேமரா'' மாடலை பற்றி வாட்ஸ் அப்பில் எழுத்து வடிவில் விவாதியுங்கள்.. சிறிது நேரம் கழித்து நீங்கள் முகப்புத்தகம் போனால்.. அந்த கேமரா மாடல் விளம்பரம் வரும். #ஆய்வுமுறை2 நீங்களும் உங்கள் நண்பரும் ஒரு குறிப்பிட்ட மொபைல் மாடலை பற்றி தொலைபேசியில் குரல் வழியாக விவாதியுங்கள்.. சிறிது நேரம் கழித்து நீங்கள் முகப்புத்தகம் போனால்.. அந்த மொபைல் மாடல் விளம்பரம் வரும்... #ஆய்வுமுறை3 நீங்கள் ஒரு பெரும் வணிக கடைக்கு முன்பு சிறிது நேரம் நில்லுங்கள்.. உதாரணத்திற்கு பிக் பஜார் போன்ற கடைகளில் நில்லுங்கள்.. சிறிது நேரம் கழித்து நீங்கள் முகப்புத்தகம் போனால்.. அந்த கடையின் விளம்பரம் வரும்... #ஆய்வுமுறை4 உங்கள் கணினியில் ஒரு பொருளை தேடுங்கள்.‌. உதாரணத்திற்கு கைகடிகாரம்.. சிறிது நேரம் கழித்து நீங்கள் உங்கள் கைப்பேசி முகப்புத்தகம் போனால்.. அந்த கைகடிகாரம் விளம்பரம் வரும்... அதாவது கணினியில் தேடியது கைபேசியில் வ...

தமிழை Tamil என்றே எழுதுவோம்

Image
தமிழ் தெரியாதவர்களுக்கு தான் ஆங்கிலத்தில் Tamil என்று எழுதுகிறோம், தமிழ் தெரியாதவர்கள்  #Tamizh  என்பதை தமிஜ் என்றுதான் படிப்பார்கள். தமிழ்நாடு கூட Tamilnadu என்றுதான் இருக்கிறது, நாம் தமிழர் என்ற கட்சியின் பெயர் கூட Tamilar என்றுதான் இருக்கிறது, தமிழர்களை உலகெங்கும் Tamils என்றுதான் அழைக்கிறார்கள், உண்மையில் தமிழை ஆங்கிலத்தில் Tamil என்று எழுதாமல், இப்படி Tamizh என்று எழுதுவது, தமிழை தமிழ் அறியாதவர ்கள் படிக்க முடியாமல் செய்யும் சதி என்று தோன்றுகிறது. இது எனது நிலைப்பாடு. தமிழை Tamil என்றே எழுதுவோம்.. எழுத்து என்பது ஒரு குறியீடு.. தமிழில் மாத்திரை அளவு உண்டு.. அதனை ஆங்கிலத்தில் நம்மால் இணைக்க முடியாது.. தமிழ் அல்லாத பிற மொழி எழுத்துக்கள் ஒரு குறியீடு மட்டுமே.. அதனை வைத்து கிட்டத்தட்ட புரிந்துகொள்ளும்படி இருத்தல் வேண்டும்.. தமிழ் எழுத்து மொழி அல்ல ஓசை மொழி.. உலகில் அனைத்தும் முடியும் அப்படி தான்.. பிறப்பால் அமெரிக்கராக இருக்கும் பலருக்கு எழுதப் படிக்கத் தெரியாமல் இருக்கிறது... அவர்களுக்கு வகுப்பெடுக்கும் காணொளிகளை பார்த்தால்.. அவர்கள் எழுத முயலும் ஸ்பெல்லிங் மிக வித்தியாசம...

தமிழே மந்திரம்

Image
தமிழில் மந்திரம் பாட வேண்டும் என்று போராடும் இந்த வேளையில் தமிழே மந்திரம் என்பதை நினைவில் கொள்வோம் #ஓம் - மூலமந்திரம் [அ + உ – ஓ + ம் - ஒம்.] ஓமெனு மோரெழுத்து - கம்பராமாயணம் ஓம் என்பது தமிழ் எழுத்து என்பதற்கு இலக்கிய சான்றுகள் கம்பராமாயணம் முதல் பல இருக்கிறது. சிந்து நாகரீக ஓமெனும் முத்திரையும் தமிழி எழுத்தில் ஓ என்ற சொல்லுக்கு உள்ள வடிவமும் ஒற்றுமையாக இருக்கிறது..  ஓ - 𑀑 ॐ சிந்து எழுத்துக்கள் தமிழ் எழுத்துக்கள் என்ற பலரும் கூறி வரும் இந்த வேளையில் ஓம் ஸ்வஸ்திக் அடையாளம் ஆகிய அனைத்தும் தமிழர்களின் அடையாளங்களே உயிர் எழுத்தின் தன்மை பன்மை யீறு என்ற தமிழ் இலக்கணத்தில் அம் ஆம் இம் ஈம் உம் ஊம் முதல் ஓம்வரை அனைத்தும் தமிழில் இருக்கிறது..  மங்கல அடையாளமாகக் கருதப்படும் ஓம் இலச்சினை (Swa- stika); உலகமுழுவதும் பரவியுள்ளது. சிந்துவெளி முத்திரைக ளில் பெருகக் காணப்படுகிறது. இது அந்தக் காலத்திய எழுத்துகளில் ஒன்றாக இருக்கலாம் என்னும் கருத்தினை திரு. கிருட்டிணா வேணுகோபால் என்பவர் (Mirror-Apr.1985); வெளியிட்டிருந்தார். இதனை உணராத பலர் மந்திரம், தாயத்து. தகட்டு ஏவலெழுத்து என...

பழந்தமிழர் பாதங்களின் தூரங்கள்

Image
பழந்தமிழர் பாதங்களின் தூரங்கள் கடலோடிகளே தமிழர்களின் அடையாளமாக நாம் இதுவரை பார்த்து வருகிறோம். அவர்களே தமிழர்களின் பெருமைகளை உலகம் முழுவதும் கடல் வழியே கடத்திச் சென்றார்கள் என்ற கோணத்தில் நாம் பார்த்து வருகிறோம். அது உண்மை என்பதில் எந்த வித ஐயமும் இல்லை. அதே நேரத்தில் மனிதன் நிலம் வழியாக கடந்த தூரங்களை நாம் கணக்கிடுவதாக எனது பார்வையில் பெரிதாக தெரியவில்லை. நான் சிறுவயதில் இருக்கும் பொழுது எனது பாட்டி ஊரிலிருந்து சிலர் எங்கள் வீட்டிற்கு கிட்டத்தட்ட 50 கிலோ மீட்டர் நடந்து வருவார்கள். அவர்களுக்கு அந்த நடை பெரும் தூரமாக தெரிவதில்லை. அதனை வைத்து பழந்தமிழர்களின் பயணங்களை சற்று நோக்கும்போது. இதுவரை எனக்குள் இருந்த பிம்பம் உடைந்தது. அதாவது கீழடியில் இருந்து மொகஞ்சதாரோ சிந்து நாகரிக இடத்திற்கு நடந்து செல்வதற்கு வெறும் 500 மணி நேரம் தான் ஆகும். அதாவது 20 வெறும் நாட்கள். 20 நாட்கள் யாராலும் தொடர்ந்து நடக்க முடியாது, அவர்கள் சற்று ஓய்வு எடுத்து ஓய்வெடுத்துக் தான் நடந்து சென்று இருப்பார்கள். அதனடிப்படையில் ஒரு மனிதன் தனது வாழ்நாளில் சராசரியாக எத்தனை கிலோமீட்டர் நடக்கிறான் என்ற கணக்கை பார...

மாற்றுப் பார்வையில் மொழி

Image
மாற்றுப் பார்வையில் மொழி மனிதனின் வயது 4லட்சம் (Neanderthals) என்றிருக்க மொழிகளின் வயது 4000-6000 வருடத்தை தாண்டவில்லை. காரணம் மொழி அதற்குமுன் இருந்ததற்கான அடையாளங்களை ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஒருவேளை இரண்டு லட்சத்திற்கு முன்பு வாழ்ந்த மனிதன் ஏதோ எழுத்துக்கள் மூலம் தகவல்களை சேகரித்து வைத்திருக்கிறார் என்பது நாளை கண்டுபிடிக்கப்பட்டால் மொழியின் வயது இரண்டரை லட்சத்தை தாண்டும் என்பதே உண்மை. மொழி மனிதனுடன் சேர்ந்தே பிறந்தது என்பதே உண்மை. மனிதன் செவிடாக பிறக்கவில்லை. காது கேளாதவர்கள் தான் ஒலியை எழுப்ப முடியாதவர்களாக இருப்பார்கள். மனிதன் அப்படி இருந்திருக்க வாய்ப்புகள் இல்லை. அவன் பிறந்த கணம் முதல் ஏதோ ஒரு ஓசையில் சக மனிதனுடன் தொடர்பு கொண்டு தான் இருந்திருக்க வேண்டும். இன்று இருக்கும் விலங்குகளைப் போல. கிளிகள் முதல் உலகில் உள்ள அனைத்து விலங்குகளும் மனிதனுக்கு மொழி ஆசிரியனாக இருந்திருக்க வேண்டும். இயற்கை எனும் ஆசான் முன் ஆதிமனிதன் ஆகச் சிறந்த மாணவன் என்பதில் ஐயமில்லை. ஒரு மொழி துளித்துளியாக உருவாகி அது முழுமை பெற்று செம்மொழி போன்ற அந்தஸ்தைப் பெறுவதற்கு காலம் பல எ...