#ஈழநில_நடுகல்
#ஈழநில_நடுகல்

முன்னோர் வழிபாடு தமிழர்களின் மரபு. அதுவும் ஒரு இனத்தை குழுவை காக்க போராடி இறப்பு வரை கடவுளாகவே போற்றி வருவது வழக்கம். நமது சம காலத்தில் நம் கண் முன்னே இனத்தை காக்க லட்சக்கணக்கான பேர் இறந்தும். அவர்களுக்கான நினைவுகூறல் முழு சுதந்திரத்துடன் எங்குமே நடத்தப்படுவதில்லை.
ஈழ நிலத்தில் பெரும் தடைகளைத் தாண்டியே நடத்தி வருகிறார்கள். புலம்பெயர்ந்த நாடுகளில் ஆங்காங்கே சில அரங்குகளில் நடத்துகிறார்கள். ஒப்பீட்டளவில் தமிழகத்தில் தான் பெரும் கூட்டங்கள் கூடி வருகிறது. அதுவும் ஒரு சில அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் நடத்தப்பட்டு வருகிறது.
பெரும் தலைவர்களும் பெரும் இயக்கங்களும் நடத்துவதும் அதற்குப் பின் சென்று தான் நாம் நமது உணர்வை வெளிப்படுத்த வேண்டும் என்று நாம் தேங்கி நிற்பதும் நம் வீரர்கள் செய்த தியாகத்தின் முன் அர்த்தமற்றது.
நமக்காக உயிர் நீத்தவர்களை நினைவு கூற யாரையும் நம்பி யாருக்காகவும் நாம் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. நாம் அனைவரும் நமக்கு தெரிந்த நமக்கு பிடித்த ஏதோ ஒரு வகையில் நன்றி அஞ்சலியை செலுத்துவோம்.
எந்த ஒருவனும் அடுத்தவர் நினைவில் இருக்கும் வரை அவன் இறப்பதில்லை என்பதே உண்மை. கடைசி தமிழன் இருக்கும் வரை ஈழத்தில் மாண்டவர்கள் இறக்கப் போவதில்லை.
தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர்களின் கல்லறைகள் மற்றும் நினைவுக்கற்கள் போன்றனவற்றினை உள்ளடக்கிய பிரதேசம் *மாவீரர் துயிலும் இல்லம்* எனப்படும். மாவீரர் துயிலும் இல்லங்களில் மாவீரர் தினமான நவம்பர் 27ம் திகதியன்று மாலை 6.05 மணிக்கு மாவீரர்களின் நினைவுக்கற்களுக்கும், கல்லறைகளிற்கும் ஈகைச்சுடர் ஏற்றுவர்.
2009இல் போரின் பின்பு இந்த மாவீரர் துயிலும் இல்லங்களில் பெரும்பாலானவை இலங்கை படையால் அழித்தொழிக்கப்பட்டன. இதனை மீட்டு எடுக்க வலைத்தளத்தில் (VIRTUAL CEMETERY) *மாவீரர் மெய்நிகர் துயிலறை*யை நாம் உருவாக்க வேண்டும். தமிழ் நிலத்துக்காக, தமிழ் இனத்துக்காக இழந்த ஒவ்வொரு உயிரையும் உலகில் உள்ள ஒவ்வொரு தமிழனும் அறிய வழிவகை வேண்டும்.
வீரதியாக வீரர்களுக்காக ஒப்பாரி பாடல்கள் பாடக்கூடாது புறநானூற்றுப் பாடல்கள் பாடப்பட வேண்டும்.
குறிப்பு இந்த படத்தை போன்று கிறிஸ்டல் கல்லில் லேசர் பிரிண்ட் செய்து வீட்டில் வைத்து நினைவாக போற்றலாம்.
இவண்
தமிழறிவன்.திரு.ஐங்கர்சால், நார்வே
Comments
Post a Comment